அசுவினி
அருள்மிகு பிறவி மருந்தீஸ்வரர் திருக்கோயில் மூலவர் பிறவி மருந்தீஸ்வரர் தாயார் பிரகன்நாயகி அல்லது பெரியநாயகி ஊர் திருத்துறைப்பூண்டி மாவட்டம் திருவாரூர் மாநிலம் தமிழ்நாடு சித்திரை திருவிழா இங்கு விசேஷம் நவராத்திரி திருவிழா ஆகியவை நடக்கின்றன இக்கோயிலின் விசேஷ அம்சம் சிவனின் கஜசம்ஹார மூர்த்தியாகும் அமாவாசை பவுர்ணமி நாட்களில் இம்மூர்த்தியை வழிபடுவதன் மூலம் மனதில் பயம் என்ற சொல்லுக்கே இடமிருக்காது இவர் ஆணவத்தையும் வேறு இருப்பவர் இங்கு மரகத லிங்கம் அமைந்துள்ளது கூடுதல் சிறப்பு
காலை 6 மணி முதல் 11 மணி வரை மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை நடை திறந்திருக்கும்
அசுவினி நட்சத்திரக்காரர்களின் பொது குணம் செல்வந்தராகவும் புத்தி சாதுர்யம் கொண்டவர்களாகவும் இருப்பர் விவாதம் செய்வதிலும் ஆடம்பரத்திலும் நாட்டம் இருக்கும் மற்றவர்களை நன்கு புரிந்து கொண்டு அன்புடன் பழகுவர் ஆசிரியரைப் போல நல்ல விஷயங்களைப் பிறருக்குப் போதிப்பர்
திருமணத்தடை குழந்தை பாக்கியம் கல்வியில் சிறந்து விளங்க இறைவனை பிரார்த்திக்கலாம்
அஸ்வினி நட்சத்திரக்காரர்கள் தங்களுக்கு ஏற்படும் தோஷங்கள் நீங்க இத்தல இறைவனை வழிபாடு செய்தல் விசேஷம் சுவாமி மற்றும் அம்பாளுக்கு அபிஷேகம் செய்தும் வஸ்திரம் அணிவித்தும் நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்
செல்லும்வழி திருவாரூரில் இருந்து திருத்துறைப்பூண்டி 30 கிலோமீட்டர் தொலைவிலும் தஞ்சாவூரிலிருந்து 65 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது. பழைய பஸ் ஸ்டாண்டிற்கு மிக அருகிலும் புதிய பஸ் ஸ்டாண்டில் இருந்து 2 கிலோமீட்டர் தொலைவிலும் நகரின் மையத்தில் கோயில் அமைந்துள்ளது.
அருகிலுள்ள ரயில் நிலையம் திருவாரூர் அருகில் உள்ள விமான நிலையம் திருச்சி தங்கும் வசதி திருவாரூர்
அஸ்வினி நட்சத்திரத்திற்கு மருத்துவ சக்திகள் அதிகம் உண்டு. அசுவினி நட்சத்திர தேவதைகளும் மருத்துவ தேவதைகளும் தினமும் வழிபாடு செய்யக்கூடிய தலமே பிறவி மருந்தீஸ்வரர் கோவில் ஆகும்.
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்.
இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிறவியிலேயே நோய் நிவாரணி தன்மை இருக்கும் இருந்தாலும் இவர்கள் தம் வாழ்நாளில் அடிக்கடியோ தாங்கள் பிறந்த நட்சத்திர நாளிலோ இத்தலம் சென்று தன்வந்திரி ஹோமம் சனீஸ்வர ஹோமம் செவ்வாய் பகவான் வழிபாடு செய்தால் நோயில்லாத வாழ்வு அமையும்